Posts

சவூதி வாழ்க்கை..

Image
சவூதி வாழ்க்கை..  பொதுவாக சொல்லப் போனால் என்னுடைய இளமை காலங்களை  நான் பிரித்தானியாவில் கழித்தவன், பொழுது போக்குகள் அதிகம் கடந்துவிடாத எனது வாழ்க்கையில்  வேலை மட்டுமே எனது குறிக்கோள்.  வேலை நிமிர்த்தம் நான் அதிகம் இடங்களுக்கு பயணிக்கா விடினும்  சில முக்கிய இடங்களுக்கு பயணித்தவன்.  மிக அதிகமாக மனித நேயத்தை பின்பற்றுகின்ற அந்த நாட்டில் சில  மனிதாபிமானமற்ற விடயங்களையும் கண் முன்னாள் பார்த்தவன்.  பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னுள் ஆணிவேராய் இருந்த ஒரு விடயம் மத்திய கிழக்கில் அதுவும் சவூதி அராபியாவில் சில காலம் தொழில்நிமித்தம் போக  வேண்டும் என்பதுதான். 19 வயதில் ஆரம்பித்த பிரித்தானியா பயணம் சுமார் 8.5 வருடங்களுக்கு பிறகு பூர்த்தியானது.  ஆனால் மத்திய கிழக்கில் பனி செய்ய வேண்டும் என்றால்  மேட்படிப்பு   சில படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகையால் எனக்கு   என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிக்க நண்பர்களும் குடும்பமும் உட்சாகமூட்ட  தொடங்கியது படிப்பு. திருமணமான பிறகும் இருவரும் படிக்கிறார்கள் என்று சிலர் வசைபாட பிள்ளை தூக்கும்  வயதில் புத்தகம் தூங்குகிறான் என்றும் சில
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது  வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை  ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா  தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான்  இஷா  தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.  சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது.  அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார்க்க பிரச்சாரம்  நிகழ்த்தினார். அந
தனிமை மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும் மீண்டும் தனிமை  தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று  திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது.  வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி  தனிமை வலியது  அது பல விடயங்களை  மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று  தனிமை வலியது அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது   தனிமை வலியது தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன. மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது உண்மைதான் தனிமை வலியது அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான்  வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம். உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்
மறதி இறைவனால் எனக்கு கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதுமான  பெரும் பொக்கிஷம்.
27 வருடங்கள் கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்., என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது?? 103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும். கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. இ

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை  எமது நினைவுகளை  அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்  ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.