வாழ்க்கை

அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும்.
அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள்
உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை.
அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செடி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது.
வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை
கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை.
வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து
விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும்,
காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர்
தான் வேண்டும்.
இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற
பேதமின்றி மாற்றுகிறது.மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும்,
வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி
வைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் சொல்வதை தவிர்க்க
முடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
சந்தோசம் என்பதே வாழ்வின் குறிக்கோள்,
சம்பவங்களும் சங்கடங்களும் அடைப்புக் குறிக்குள் வரும் விடயங்கள்,
இலக்கை அடைவதே முயற்சி.
மொத்தத்தில் வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.
என்றும் வாழ்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிப்போம்.

வாழ்த்துகளுடன்,
மபாஸ் பரீத்.

Comments

  1. அருமை அருமை மபாஸ்.... வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீதனக் கொடுமை