Posts

Showing posts from 2011

நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால் மறக்க முடியவில்லை உன் நினைவுகளை மறக்க போகும் அக்கணம் மரணித்துவிட வேண்டும் உன் நினைவுகளுடன்.

கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன், ஆசையுடன் உன்னை அழைத்தேன், அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன், ஆசையுடன் நீ தந்த அந்த கவருடன் கூடிய கடதாசி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது. நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை பெற முடியாத இடத்தில் தொலைத்ததை எண்ணி அழுவதக்கு, நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை தாடி வளர்த்து கையுடன் மதுபான போத்தலுடன் திரிவதக்கு, நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை கணப் பொழுதில் கல்யானதுக்காய் காதலனை மாற்றுவதக்கு, என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை மறந்துவிட்டேன், கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது, நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை. கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக கரைகிறது என் இதயம் இனி நான் நானாக வாழவேண்டும் என் நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,

முதல் கவிதை

ஒரு கோடி வானவில் ஓராயிரம் நட்சத்திரம் ஒருமித்த வானமதில் ஒரு வண்ண தேவதையாய் ஒரு நிலா அவள்... ஒரு முறை பார்தால் போதும் ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம் ஒரு நாளிகை பார்க்க வேண்டி ஒரு ஜென்மம் தவமிருந்து ஒரு கோடி கண்களுடன் ஓடக்கரை தேர் அருகில் ஒரு நாள் காத்திருந்தேன் ஒரு மயில் தூரத்தில் ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு ஒதுங்கி நின்ற என்னை பார்த்து ஓ வென்று அழுதவலாய் ஒரு வார்த்தை சொன்னால் ... மறந்து விடு என்னை.... அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம் அவளின் வருங்கால கணவனோடு... (தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான் அர்த்தங்கள் உணரப்படுகின்றன. நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம் உன்னை காதலிக்க வைத்தது. நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது. மனமிணைந்த எம்மை உன் தந்தையின் தன்மானம் பிரித்து விட்டது. பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன். என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும். உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை மட்டும் வைத்து விடாதே, ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும் கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும் பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால் மனது சற்று தளர்துதான் போகிறது எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான், மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை. என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும் சத்தியமாக நான் உன்னை காதலித்த காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே ஏனனில் நான் காதலித்தது நிஜம், என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம், நான் உன்னை மறக்க நினைப்

முடியாத முயற்சி

அவளை நினைத்து தூங்குகையில் பசி கூட ருசியாய் இருக்கிறது அவள் வார்த்தை மட்டும் செவிகளில் ரீங்காரமிட தெளிந்த நீரோடை போன்ற அவள் முகம் மட்டும் கானல் நீராய் கன்முன்னே கலைந்து போக ஏதோ சாதிட்டு விட்ட சந்தோஷத்தில் நான் பிரிந்த காதல் சுவடுகளை கவி விட்டு அழித்துக்கொண்டு,,, முடியாத முயற்சி முடிந்தவரை முயற்சிப்பது என் மூச்சி

சீதனக் கொடுமை

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும் வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம் பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம் ஆறேழு லட்சம் என்றால்.... சீதனம் கொடுக்கும் , வாங்கும் அனைவரும் பச்சை விபச்சாரிகளே... பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும் தந்தையை விட ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற வியாபாரிகளே கவனமாய் இருங்கள். தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது உங்கள் தவறான கொள்ளையடிப்பினால் நாளை உனக்கும் எயி்ட்ஸை விட கொடிய நோய் வரலாம்... கரும்புத் தோட்டத்தில் களவிலே பிடிபட்டாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு காசு கொடுத்தால் ஆயிரம் மாப்பிள்ளை வருவான்... பார்த்தாயா சகோதரனே... உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான் உன்னை விட வீதியில் செல்லும் நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்