கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான்
அர்த்தங்கள் உணரப்படுகின்றன.
நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால்
எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம்
உன்னை காதலிக்க வைத்தது.
நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை
நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது.
மனமிணைந்த எம்மை உன் தந்தையின்
தன்மானம் பிரித்து விட்டது.
பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன்.
என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும்.
உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை
மட்டும் வைத்து விடாதே,
ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும்
கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும்
பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால்
மனது சற்று தளர்துதான் போகிறது
எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான்,
மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று
எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ
என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை.
என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும்
சத்தியமாக நான் உன்னை காதலித்த
காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே
ஏனனில் நான் காதலித்தது நிஜம்,
என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம்,
நான் உன்னை மறக்க நினைப்பது நிஜம்,
இப்பொழுதுவரை என்னால் மறக்க முடியவில்லை என்பதும் நிஜம்.

இவ்வளவுகாலமும் புரிய முடியா வாழ்க்கை தத்துவங்கள்
இப்போளுதுமட்டும் கனவிலும் புரிகிறது.
இன்ப துன்பங்களின் ஏற்ற இறக்கங்களும் புரிகிறது.
இனியும் காதலிப்பேன் பிரியாத, பிரிக்க முடியாத
விலகாத, விலக்க முடியாதவற்றை காதலிப்பேன்
ஆனால் இப்போது மட்டும் நான் உன்னை காதலித்து
இருப்பின் நிச்சயம் நீ என்னை கைவிட்டு இருக்க மாட்டாய்.

Comments

Popular posts from this blog

வாழ்க்கை