முதல் கவிதை

ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்

... மறந்து விடு என்னை....
அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...
(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

Comments

Popular posts from this blog

சீதனக் கொடுமை