கணம் நிரம்பிய வலிகள்
அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை எமது நினைவுகளை அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள் ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.