Posts

Showing posts from December, 2012

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,