27 வருடங்கள்

கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்.,

என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது??

103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும்.

கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. இறைஉதவியால் இப்போது  பெரும்பாலும் தூண்களை இழந்த மண்டபங்கள், வேர் அறுபட்ட மரங்கள் எல்லாம் தடுமாறி எழுந்து நிட்கின்றன.

இவை இழந்தவையும், கடந்து வந்தவையும் கணமானவை, கடினமானவை.
மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாதவை. இவை என்னுடையதும் எனது ஊரினதும் உள்ளக்குமுறல்கள். கணவனை இழந்த மனைவியின் நிலை,சகோதரனை இழந்த உடன்பிறப்புகளின் நிலை, மகனை இழந்த பெற்றவர்களின் நிலை, தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலை இவற்றையெல்லாம் அருகில், சொந்த ஊரில்  கூட இருந்து உணர்ந்து இருக்கிறேன்.

இவை எல்லாம் எப்பொழுதும் அழிக்க முடியாத வடுக்கள் இரு இறைஇல்லத்திலும் இன்றுவரை மறைக்காமல் இருக்கும் அடையாளம் போன்று எங்கள் உள்ளங்களில்.


மபாஸ் பரீட்.

பரீட் ( MCM பரீட் ) இற்றைக்கு 27 வருடங்களுக்கு முன் (1990 ம் ஆண்டு) காத்தான்குடி பள்ளிவாயல்களில்   நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் ஷகீதாக்கப்பட்ட 103 புனிதர்களில் ஒருவர். 

Comments

Popular posts from this blog

சீதனக் கொடுமை