தனிமை

மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்
மீண்டும் தனிமை 
தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று 
திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது. 
வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி 
தனிமை வலியது 
அது பல விடயங்களை  மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று 
தனிமை வலியது
அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது  
தனிமை வலியது

தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன.
மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு
பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது

உண்மைதான் தனிமை வலியது
அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான்  வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம்.

உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்


Comments

Popular posts from this blog

சீதனக் கொடுமை