Posts

முதல் கவிதை

ஒரு கோடி வானவில் ஓராயிரம் நட்சத்திரம் ஒருமித்த வானமதில் ஒரு வண்ண தேவதையாய் ஒரு நிலா அவள்... ஒரு முறை பார்தால் போதும் ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம் ஒரு நாளிகை பார்க்க வேண்டி ஒரு ஜென்மம் தவமிருந்து ஒரு கோடி கண்களுடன் ஓடக்கரை தேர் அருகில் ஒரு நாள் காத்திருந்தேன் ஒரு மயில் தூரத்தில் ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு ஒதுங்கி நின்ற என்னை பார்த்து ஓ வென்று அழுதவலாய் ஒரு வார்த்தை சொன்னால் ... மறந்து விடு என்னை.... அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம் அவளின் வருங்கால கணவனோடு... (தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான் அர்த்தங்கள் உணரப்படுகின்றன. நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம் உன்னை காதலிக்க வைத்தது. நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது. மனமிணைந்த எம்மை உன் தந்தையின் தன்மானம் பிரித்து விட்டது. பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன். என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும். உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை மட்டும் வைத்து விடாதே, ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும் கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும் பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால் மனது சற்று தளர்துதான் போகிறது எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான், மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை. என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும் சத்தியமாக நான் உன்னை காதலித்த காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே ஏனனில் நான் காதலித்தது நிஜம், என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம், நான் உன்னை மறக்க நினைப்...

முடியாத முயற்சி

அவளை நினைத்து தூங்குகையில் பசி கூட ருசியாய் இருக்கிறது அவள் வார்த்தை மட்டும் செவிகளில் ரீங்காரமிட தெளிந்த நீரோடை போன்ற அவள் முகம் மட்டும் கானல் நீராய் கன்முன்னே கலைந்து போக ஏதோ சாதிட்டு விட்ட சந்தோஷத்தில் நான் பிரிந்த காதல் சுவடுகளை கவி விட்டு அழித்துக்கொண்டு,,, முடியாத முயற்சி முடிந்தவரை முயற்சிப்பது என் மூச்சி

சீதனக் கொடுமை

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும் வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம் பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம் ஆறேழு லட்சம் என்றால்.... சீதனம் கொடுக்கும் , வாங்கும் அனைவரும் பச்சை விபச்சாரிகளே... பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும் தந்தையை விட ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற வியாபாரிகளே கவனமாய் இருங்கள். தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது உங்கள் தவறான கொள்ளையடிப்பினால் நாளை உனக்கும் எயி்ட்ஸை விட கொடிய நோய் வரலாம்... கரும்புத் தோட்டத்தில் களவிலே பிடிபட்டாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு காசு கொடுத்தால் ஆயிரம் மாப்பிள்ளை வருவான்... பார்த்தாயா சகோதரனே... உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான் உன்னை விட வீதியில் செல்லும் நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்

வாழ்க்கை

அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள் உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செ டி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும், காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர் தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பே தமின்றி மாற்றுகிறது. மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி வைக்கிறார்கள். ...

மாற்றங்கள்

மாற்றங்கள் தேவை மண்ணில் அல்ல மனிதர்களின் மனதில் வெளியே வெண்மையுடனும் உள்ளே கருமையுடனும் உலா வரும் மனிதர்கள் ஏராளம் உலகில் எங்கு சென்றாலும் இத்தகைய மனிதர்களை காண்பது எளிது நல்ல மனிதர்களை காண்பதென்பது மிக மிக அரிது மனிதர்களின் மனம் மாறாதவரை செயல்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது அவ்வாறு மாற்றம் இருந்தாலும் ஏதோ உள் நோக்கம் இருக்கும் மனதில் உள்ளதை எம்மால் அறிய முடியாது இறைவன் ஒருவனே அதை அறிவான் பேசும் போது கேட்க நன்றாக இருக்கும் பிறகு பார்த்தல் செயல்கள் மிக மோசமாக இருக்கும் எங்கு சென்றாலும் எத்தனை அறிவுரைகளை பெற்றாலும் மனதில் மாற்றம் வரும் வரை செயல்களில் உண்மையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது மனதில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏங்கும் மபாஸ் பரீத்

நேசம் ..

நிலவின் வெப்பத்தை இரவில் அனுபவிததுண்டா ?? அழகிய குறிஞ்சிப்பூவின் மொட்டை திறந்ததுபர்ததுண்டா ?? சிரித்துக்கொண்டு பிறந்த குழந்தையை கண்டதுண்டா ?? முதல் முதல் சொன்ன பொய்யின் ஆழம் அறிந்ததுண்டா ?? இல்லையனின் நீ உன்னை நேசி உலகம் உன்னை நேசிக்கும். மபாஸ் பரீத்