Posts

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை  எமது நினைவுகளை  அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்  ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.

நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால் மறக்க முடியவில்லை உன் நினைவுகளை மறக்க போகும் அக்கணம் மரணித்துவிட வேண்டும் உன் நினைவுகளுடன்.

கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன், ஆசையுடன் உன்னை அழைத்தேன், அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன், ஆசையுடன் நீ தந்த அந்த கவருடன் கூடிய கடதாசி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது. நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை பெற முடியாத இடத்தில் தொலைத்ததை எண்ணி அழுவதக்கு, நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை தாடி வளர்த்து கையுடன் மதுபான போத்தலுடன் திரிவதக்கு, நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை கணப் பொழுதில் கல்யானதுக்காய் காதலனை மாற்றுவதக்கு, என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை மறந்துவிட்டேன், கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது, நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை. கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக கரைகிறது என் இதயம் இனி நான் நானாக வாழவேண்டும் என் நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,

முதல் கவிதை

ஒரு கோடி வானவில் ஓராயிரம் நட்சத்திரம் ஒருமித்த வானமதில் ஒரு வண்ண தேவதையாய் ஒரு நிலா அவள்... ஒரு முறை பார்தால் போதும் ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம் ஒரு நாளிகை பார்க்க வேண்டி ஒரு ஜென்மம் தவமிருந்து ஒரு கோடி கண்களுடன் ஓடக்கரை தேர் அருகில் ஒரு நாள் காத்திருந்தேன் ஒரு மயில் தூரத்தில் ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு ஒதுங்கி நின்ற என்னை பார்த்து ஓ வென்று அழுதவலாய் ஒரு வார்த்தை சொன்னால் ... மறந்து விடு என்னை.... அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம் அவளின் வருங்கால கணவனோடு... (தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான் அர்த்தங்கள் உணரப்படுகின்றன. நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம் உன்னை காதலிக்க வைத்தது. நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது. மனமிணைந்த எம்மை உன் தந்தையின் தன்மானம் பிரித்து விட்டது. பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன். என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும். உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை மட்டும் வைத்து விடாதே, ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும் கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும் பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால் மனது சற்று தளர்துதான் போகிறது எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான், மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை. என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும் சத்தியமாக நான் உன்னை காதலித்த காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே ஏனனில் நான் காதலித்தது நிஜம், என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம், நான் உன்னை மறக்க நினைப்...

முடியாத முயற்சி

அவளை நினைத்து தூங்குகையில் பசி கூட ருசியாய் இருக்கிறது அவள் வார்த்தை மட்டும் செவிகளில் ரீங்காரமிட தெளிந்த நீரோடை போன்ற அவள் முகம் மட்டும் கானல் நீராய் கன்முன்னே கலைந்து போக ஏதோ சாதிட்டு விட்ட சந்தோஷத்தில் நான் பிரிந்த காதல் சுவடுகளை கவி விட்டு அழித்துக்கொண்டு,,, முடியாத முயற்சி முடிந்தவரை முயற்சிப்பது என் மூச்சி