Posts

தனிமை மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும் மீண்டும் தனிமை  தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று  திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது.  வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி  தனிமை வலியது  அது பல விடயங்களை  மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று  தனிமை வலியது அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது   தனிமை வலியது தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன. மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது உண்மைதான் தனிமை வலியது அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான்  வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம். உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்
மறதி இறைவனால் எனக்கு கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதுமான  பெரும் பொக்கிஷம்.
27 வருடங்கள் கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்., என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது?? 103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும். கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் எ...

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை  எமது நினைவுகளை  அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்  ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.

நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால் மறக்க முடியவில்லை உன் நினைவுகளை மறக்க போகும் அக்கணம் மரணித்துவிட வேண்டும் உன் நினைவுகளுடன்.

கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன், ஆசையுடன் உன்னை அழைத்தேன், அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன், ஆசையுடன் நீ தந்த அந்த கவருடன் கூடிய கடதாசி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது. நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை பெற முடியாத இடத்தில் தொலைத்ததை எண்ணி அழுவதக்கு, நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை தாடி வளர்த்து கையுடன் மதுபான போத்தலுடன் திரிவதக்கு, நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை கணப் பொழுதில் கல்யானதுக்காய் காதலனை மாற்றுவதக்கு, என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை மறந்துவிட்டேன், கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது, நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை. கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக கரைகிறது என் இதயம் இனி நான் நானாக வாழவேண்டும் என் நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,