கொடுக்க முடியவில்லை வாழ்நாள் முழுதுமாய் உழைத்த போதிலும் கொடுக்க முடியவில்லை வாழ்வாதாரம் முடிகின்ற போதிலும் கொடுக்க முடியவில்லை என்னால் , முழுவதும் சிவந்த அந்த உயிரினால் கேட்க கூட முடியவில்லை. தான் சுமந்த பத்து மாத கடனினை
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள். சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது. அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார்க்க பிரச்சாரம் நிகழ்த்தினார். அந
தனிமை மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும் மீண்டும் தனிமை தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது. வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி தனிமை வலியது அது பல விடயங்களை மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று தனிமை வலியது அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது தனிமை வலியது தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன. மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது உண்மைதான் தனிமை வலியது அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான் வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம். உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்
அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள் உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செ டி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும், காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர் தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பே தமின்றி மாற்றுகிறது. மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி வைக்கிறார்கள்.
Comments
Post a Comment